பாலைவனத்தில் ஒரு ரோஜாவாக நீ எனக்கு தெரிந்ததால்..அதில் இருந்த முட்கள் என் கண்களுக்கு தெரியவில்லை..முட்கள் என் கைகளை தைத்த பின்னரே...எவ்வளவு கூர்மையானது என தெரிந்து கொண்டேன்...
நேற்று வரை வார்த்தைகள் கூடமழைத்துளி போலத்தான்...... ஆனால் இன்றோ.... இது கோடை காலமோ என்றெண்ணிவசந்த காலத்திற்காக காத்திருந்தேன்.... ஆனால் இப்பொழுது தான் உணர்கிறேன் நான் நிற்பதுவசந்த காலத்திற்கு வாய்ப்பே இல்லாத பாலைவனத்தில் என்று.... ஆனாலும் கூட - உன் மீதானநம்பிக்கையின் வேர்கள் மட்டும்படர்ந்து கொண்டே இருக்கின்றது.... மிகவும் ஆழமாய்.....