Wednesday, October 22, 2008

அன்பு

அழகை ரசித்து அன்பு வைக்காதே
அது மலரை போல் வாடி விடும்
பணத்தை பார்த்து அன்பு வைக்காதே
அது கண்ணாடியை போல் உடைந்து விடும்
என்றும் அன்புக்காக அன்பு வைத்திடு
அது என்றும் நிலைத்து நிற்கும்

பெண் நினைத்தால்

வாலிப வாழ்க்கையை வயதாக்க முடியும்
வயதான வாழ்க்கையை வாலிபமாக்கவும் முடியும்

உண்மை

என் இறுதி ஊர்வலத்திலாவது
என்னை காதலித்தது உண்மை என்று சொல்
அந்த வார்த்தை நிச்சயம் என்னை
சொர்க்கம் கொண்டு செல்லும்

ஏன் இப்படி

விழிகளால் என்னை காதலிக்க சொன்னதும் நீதான்
பின் வார்த்தை அம்புகளால் என்னை குத்தி போட்டதும் நீதான்
*********************

என் பழைய நினைவுகளை சற்று தூசி தட்டி பார்க்கிறேன்
அதில் உன் பெயரை தவிர வேறெதுவும் இல்லை
*********************

நிதம் என் உயிரோடு விளையாடுவதை
ஏன் பழக்கபடுத்தி கொண்டாய்

வார்த்தைகள்

தினம் சொல்ல துடிக்கும் வார்த்தைகள்
ஏனோ உன் விழிகள் பட்டு சிதறி போகின்றது

Tuesday, October 21, 2008

ஒத்திகை

பரபரக்கும் இள வயதில்
களவறியா உன் மனம்
உண்மையான நண்பன் என்று
போதை அரக்கனை ஏன் நாடியது

இளைஞனே இளமையின் கனவில்
இனிய ராகம் பாடவேண்டிய நீ
இரத்தம் குடிக்கும் ஹெரோயினையா
கைகளில் வருடுகிறாய்

காதலை துறந்து போதைக்கு
அடிமை ஆகி வேதனையின்
விளிம்பில் நின்றா சாதனை
செய்ய பார்க்கிறாய்

காசை கரியாக்கி
காயத்தை சருகாக்கி
உயிருக்கு உலை வைக்கவா
இந்த ஊதாரித்தனம்

நீ

இன்னும் என் நினைவு தோட்டத்தில்
நீ ஒரு வாடாமல்லிகை

ம(த)ங்கை


சிரிப்போ முல்லை
முகமோ ரோஜா
அன்பிலோ அன்னை
பண்பிலோ புனிதம்
அறிவிலோ ஆற்றல்
இத்தனையும் கொண்ட அந்த
மங்கையே என்னுயிர் தங்கை

அன்பின் ஏமாற்றம்

கண்ணில் உறக்கம் இன்றி
கண்ணீரால் வடிக்கிறேன் கவிதை
மறக்க நினைத்து விட்டேன்
நினைவுகளை அழிக்க முடியவில்லை
நித்தம் வேதனையை சுமந்து
நிம்மதி இன்றி வாழ்கிறேன்
சோதனைகள் பல கடந்து விட்டேன்
சாதனைகள் ஏதும் படைக்கவில்லை
துன்பத்தையும் சமாளித்துவிடுகிறேன்
இன்பம் எதையும் காணவில்லை
அன்புக்கு அடிமையாகிவிடுகிறேன்
அன்னையை போல் யாருமில்லை

Monday, October 20, 2008

அஸ்தமனம்

என்னை விட்டு பிரிவதை பற்றி யோசிக்காதே
ஏன் எனில் உன் மனதில் நான் அஸ்தமிக்கும் முன்னரே
என் மனதில் இருந்து நீ அஸ்தமித்து விட்டாய்

கவிதை

நினைத்து நினைத்து வடித்தேன் ஒரு கவிதை
ஒவ்வொரு வார்த்தையும் ரசித்து ரசித்து வடித்தேன்
ஆனால் உயிரோட்டமே இல்லாத கவிதை அது என்பதை
கவிதை முற்று பெற்றதுமே புரிந்து கொண்டேன்...

தோல்வி

தோல்வி தான் வாழ்க்கை என்றால்
வெற்றி எனும் பதம் இந்த உலகத்தில் ஏன்...

உனக்காக

அன்பு என்பதன் முழு அர்த்தமும் புரிந்தது

உன்னை நேசித்த பின்னர் தான்..

ஆசை என்பது எனக்கு வந்ததும்

உன்னை நேசித்த பின்னர் தான் ...

பண்பாக பழக புரிந்து கொண்டதும்

உன்னை நேசித்த பின்னர் தான்...

இனிக்க இனிக்க பேச தோன்றியதும்

உன்னை நேசித்த பின்னர் தான்...

வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும் என்று நினைத்தும்

உன்னை நேசித்த பின்னர் தான் ...

ஆனால் இன்று தோல்வியின் விளிம்பில் நின்று வாழ்க்கையின் முடிவை

எதிர்பார்த்து இருப்பதற்கு காரணமும் நீதான்.

என் நிலை

நான் நினைப்பது எதுவுமே

நடப்பதில்லை என்பதற்கு

மிக சிறந்த உதாரணமாய்

நீயும்

தாடி

என்ன முடியாத சோகங்கள்
அடர்த்தியான வேதனைகள்
அத்தனையும் இங்கே
வளர்ந்து கிடக்கின்றன

யார் வேண்டும்

மலருககு மணம் வேண்டும்..

வண்டுக்கு தேன் வேண்டும் ..

எனக்கு நீ வேண்டும்..

உனக்கு யார் வேண்டும்

மௌனம்

மௌனம் கூட ஒரு மொழிதான்
அழகும் அர்த்தமும் நிறைந்ததுதான்
அதற்காக அதையே கட்டி கொண்டு வாழ வேண்டுமா ?

Sunday, October 19, 2008

ஆட்டோகிராப்


நான் என் மனதை எழுத ஆசைப்பட்டது


உன் இதயத்தில்


அது தெரியாமலா


நீ உன் ஆட்டோகிராப் ஐ நீட்டுகிறாய்


Thursday, October 16, 2008

சமாதானம்




இலங்கையர்களின்
நிறைவேறா
கனவு......

உன் மௌன சிரிப்பும்


கொல்கின்றது என்னை

கதிரவன்

நம்மை போல அவனும்

விடியலுக்காய் காத்திருக்கிறான்

நிலவு




உன்னை முழு நிலவு என்றதாலா

மாதம் ஒரு முறை நின்முகம் காட்டுகிறாய்

காதல்


காத்து இருந்து


தவித்து


இல்லாமல் போவது

Friday, October 3, 2008

கருப்பு தங்கம்


நட்பாய் நீ பழகிய நாள் முதலாய் ....
உன் சிரிப்பும் பேச்சும் என்னுள் கலந்தது ...
ஆசையாய் நீ கூறிய காலை வணக்கங்களும்
நல விசாரணையும்....
என் சந்தோசத்திற்கு காரணங்கள் ஆயின ...
உன்னிடம் நான் இடும் சின்ன சின்ன
சண்டைகள் கூட அன்பின் வெளிபாடுதான் ...
கடல் கடந்தும் உன் அன்பால்
என்னை ஈர்த்த கருப்பு தங்கமே ...
நீ இன்று போல் என்றும் சந்தோஷமாய்
சிறப்புடன் வாழ மனமார வாழ்த்துகிறேன்

Thursday, September 25, 2008

வேதனை

மனகாயங்கள் ஏற்படும் போது தான்.......

உறவின் அர்த்தம் புரிகிறது..........

காதல் தோல்வி ஏற்படும் போது தான்....

காத்லர்களின் வேதனை புரிகிறது....

மௌனம்


நான் மௌனமாக இருக்கின்றேன்

என்று அசட்டையாக இருந்துவிடாதே...

அந்த மௌனத்தின் உள்ளே தான்

நான் அழுது கொண்டு இருக்கிறேன்

நண்பனுக்காக



தேடலாய் நீ கிடைத்த நாள் முதலாய் என்னின் பயணமும் உன்னை சுற்றியே காலம் கடந்தாலும் உனக்கான இடம் எனக்கான வெளியாய் என்னை சுமக்கும்... நன்றியின் படிமானங்கலாய்

நீ பேசும் சுடு சொல்லும்

சுகந்தமாய் இருப்பதற்கு

காரணம் காதலோ!

Tuesday, June 24, 2008

உண்மையுள்ள உன்னவள்


உருக்கதில் உருவான உண்மையான
உத்தமனேஉருகி உருகி உலமார உன்னை உருவாக்கிய உனதன்பான தாய்க்கு பூஜிக்கிரேன் என் நன்றியை.....

உண்மையுள்ள உன்னவள்