Monday, October 20, 2008

உனக்காக

அன்பு என்பதன் முழு அர்த்தமும் புரிந்தது

உன்னை நேசித்த பின்னர் தான்..

ஆசை என்பது எனக்கு வந்ததும்

உன்னை நேசித்த பின்னர் தான் ...

பண்பாக பழக புரிந்து கொண்டதும்

உன்னை நேசித்த பின்னர் தான்...

இனிக்க இனிக்க பேச தோன்றியதும்

உன்னை நேசித்த பின்னர் தான்...

வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும் என்று நினைத்தும்

உன்னை நேசித்த பின்னர் தான் ...

ஆனால் இன்று தோல்வியின் விளிம்பில் நின்று வாழ்க்கையின் முடிவை

எதிர்பார்த்து இருப்பதற்கு காரணமும் நீதான்.

No comments: