Tuesday, October 21, 2008

ஒத்திகை

பரபரக்கும் இள வயதில்
களவறியா உன் மனம்
உண்மையான நண்பன் என்று
போதை அரக்கனை ஏன் நாடியது

இளைஞனே இளமையின் கனவில்
இனிய ராகம் பாடவேண்டிய நீ
இரத்தம் குடிக்கும் ஹெரோயினையா
கைகளில் வருடுகிறாய்

காதலை துறந்து போதைக்கு
அடிமை ஆகி வேதனையின்
விளிம்பில் நின்றா சாதனை
செய்ய பார்க்கிறாய்

காசை கரியாக்கி
காயத்தை சருகாக்கி
உயிருக்கு உலை வைக்கவா
இந்த ஊதாரித்தனம்

1 comment:

அம்மு said...

very useful lines for younger generation. hope they correct themselves after reading this.